தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பார்க்கிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க “வஞ்சகமான நரி” என புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்ததன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவின் காலணித்துவ நாடாக இலங்கையை மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக எட்கா எனும் உடன்படிக்கையை கையில் எடுத்துள்ளார். 1970, 1971, 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கூட்டு படுகொலைகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்பு உண்டு.
இந்நிலையில், தற்போது இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை மூலம் மீண்டும் ஒரு கூட்டு படுகொலைக்கு ரணில் தயாராகி விட்டதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.