பரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு..! நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு
பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், காயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பகுதியினை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பதற்றமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, குற்றத்தடுப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் இணைந்து தடையங்களைம், சாட்சிகளையும் சேகரித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.