நடிகை கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொலை!

நடிகை கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொலை!

பாகிஸ்­தானின் பிர­பல மேடை நடி­கை­களில் ஒரு­வ­ரான கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் லாகூர் நகரில் கடந்த வியா­ழ­னன்று இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

இச்­ சம்­பவம் தொடர்­பாக நால்வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்­கிளில் வந்த நபர்கள், நடிகை கிஸ்மா பெய்க் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

8 தட­வைகள் கிஸ்மா பெய்க் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது. இதனால், கிஸ்மா பெய்க்கின் வயிறு, கைகள், கால்­களில் காயங்கள் ஏற்­பட்­டன.

இச் ­சம்­ப­வத்­தை­ய­டுத்து கிஸ்மா பெய்க், வைத்­தி­ய­சா­லையொன்றின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் தாஹிர் ரெஹ்மான் தெரி­வித்தார்.

எனினும், கிஸ்மா பெய்க்கின் உயிரை காப்­பாற்ற முடி­ய­வில்லை. லாகூரில் நடை­பெற்ற மேடை நாட­க­மொன்றில் கிஸ்மா பெய்க் நடித்த பின்னர், காரில் தனது வீட்டை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த போது அவரின் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது.

அவரின் பிரத்­தி­யேக உத­வி­யாளர் மற்றும் சார­தியும் இச்­ சம்­ப­வத்தில் காய­ம­டைந்­தனர். எனினும், அவர்­களின் நிலை ஆபத்­தா­ன­­தாக இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

‘உம்மால் மீண்டும் நட­ன­மாட முடி­யாமல் செய்வோம்’ என ஆயு­த­பா­ணிகள் சத்­த­மிட்ட பின்னர் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக நடிகை கிஸ்மத் பெய்க்கின் செய­லாளர் அலி பட் தெரி­வி­த்தார் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

இச்­ சம்­ப­வத்­தை­ய­டுத்து, விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸார் நால்­வரைக் கைது செய்­துள்­ளனர். கிஸ்மத் பெய்க்கின் தாயா­ரிடம் வாக்­கு­ மூலம் பெற்­ற­துடன், கிஸ்­மத்தின் பெய்க்கின் முன்னாள் கணவர் ரானா முஸம்மில், சக நடி­க­ரான மன்சூர் மற்றும் நண்பர் ஒரு­வ­ரிடம் விசா­ரணை நடத்­தி­ய­தா­கவும் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

நடிகை கிஸ்மத் பெய்­க்குக்கு எதி­ராக இதற்கு முன்­னரும் இரு தட­வைகள் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. எனினும், அச் ­சம்­ப­வங்­களில் அவர் காய­மின்றி தப்­பி­யி­ருந்தார்.

லாகூரில் நடை­பெற்ற, கிஸ்மத் பெய்க்கின் இறு­திச் ­ச­டங்கில் பெரும் எண்­ணிக்­கை­யான கலை­ஞர்கள் பங்­கு­பற்­றினர். கிஸ்மத் பெய்க் கொலை செய்­யப்­பட்­டமை பாகிஸ்­தா­னி­லுள்ள கலை­ஞர்கள் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது என பாகிஸ்தான் ஊட­கங்கள் தெரி­வித்துள்ளன.

இச் ­சம்­ப­வத்­தை­ய­டுத்து சில தினங்கள் நாடகம் எதுவும் அரங்­கேற்­றப்­ப­ட­வில்லை. இக்­ கொ­லைக்கு எதி­ராக கலை­ஞர்கள் பலர் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர்.

பாகிஸ்­தானில் மேடைக் கலை­ஞர்கள் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. நகு, நத்ரா, யஸ்மின், நகினா, நைனா, மார்வி, கரிஷ்மா, சன்கம், அர்ஸோ உட்­பட பல கலை­ஞர்கள் இவ்­வாறு கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடகமொன்றில்…

இவ் வருட முற்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநரான குஃபியா எனும் யுவதி, இனந்தெரியாத நபர் ஒருவர் ரசிகராக நடித்து வழங்கிய ஐஸ் கிறீமை உட்கொண்டதால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

parkpark01

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News