ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவர் எழுத்து மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவிஸ்ஸாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அந்த அறிக்கைகள் சம்பந்தமான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரிடம் அநுரகுமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முடிந்தால் தேர்தலுக்கு முன்னர் அந்த அறிக்கைகள் சம்பந்தமாக விவாதம் நடத்திக் காட்டுமாறு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த கருத்துக்கு அமைவாகவே இந்த எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டதாக அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.