துருக்கி விமான நிலையத்தின் மீது ராக்கெட் தாக்குதல்!
துருக்கி நாட்டில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டியார்பகிர் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகள் நிலப்பரப்பில் விழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதல் டியார்பகிர் விமான நிலையத்தில் வி.ஐ.பி. அறைக்கு வெளியே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் பயணிகள் மற்றும் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த ராக்கெட் தாக்குதலை குர்திஷ் போராளிகள் நடத்தியிருக்கலாம் என்று பொலிசாரால் சந்தேகிப்படுகின்றது.