ஜனாதிபதியை சுற்றியுள்ள கருநாகம்! உயிரைப் பறிக்குமா? பாதுகாப்பது யார்?
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றன.
எனினும் அரசாங்கத்திலும், கட்சியிலும் உள்ளக பழிவாங்கல்களும், குழி பறிப்புகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதன் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில், அவருக்கு நெருக்கமான சிலரினால் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் நாட்டிலுள்ள பிரபுக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாக பொலிஸ் விசேட அதிரடிபடையின் புதிய கமாண்டோவாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர் லதீப் நியமிக்கப்பட்டிருந்தார்.
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் கடந்த ஒன்பதாம் திகதி வழங்கப்பட்டது. எனினும் அவர் தனது பணிகளை முன்னெடுக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. வலுவான அரசியல் அழுத்தம் காரணமாக இந்த தடை ஏற்பட்டது.
பிரபு பாதுகாப்பிற்கு பொறுப்பான இலங்கையின் புகழ்பெற்ற அதிகாரியாக கருதப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப், சிறப்பு அதிரடி படையின் பிரதானி பதவியை ஏற்றுக் கொள்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், அவர் சேவை செய்யும் பொலிஸ் பயிற்சி பிரிவில் அவரை விடுவிக்காமையே காரணம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ஜனாதிபதியை சுற்றியிருக்கும் விஷமிகளினால் மேற்கொள்ளப்படுவதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அந்த விஷமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வேறு யாரும் அல்ல ஜனாதிபதியின் தற்போதைய பாதுகாப்பிற்கு பொறுப்பாக உள்ள சிறப்பு அதிரடிப்படை பிரதானி என அறிந்து கொள்ள முடிந்துள்ளன.
அவர் ஜனாதிபதியின் பெயரை விற்று “இது ஜனாதிபதி உத்தரவு” என கூறி தனது நோக்கத்தை நிறைவேற்றி கொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
சுயாதீன ஆணைக்குழு செயற்படுத்தப்பட்டுள்ள போதிலும், பல அரசாங்க அதிகாரிகள் அது தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் இன்றி தொடர்ந்து ராஜபக்ச ஆட்சியின் போது “ஜனாதிபதி கூறினார்” என கூறி செயற்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக பிரபுகள் அனைவரினதும் உயிரை பணயம் வைப்பது குறித்து ஜனாதிபதி உட்பட ஏனைய பிரபுக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அண்மையில் பாப்பாண்டவர் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததும் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமின்றி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டவரும் அவராகும்.
அவ்வாறான ஒருவர் இலங்கை பிரபுவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக சிறப்பு அதிரடி படையின் பிரதானியாக்குவதற்கு தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் ஏதோவொரு பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறவுள்ளதாக ஊகித்துக் கொள்ள முடிகிறது.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது காலத்தின் கட்டாயம் என எச்சரிக்கப்படுகிறது.