ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 17 போலீசார் உயிரிழந்தனர்.
சோமாலியா தலைநகர், மொகாதிஷூவில் உள்ள, போலீஸ் அகாடமியில், போலீசார், நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில், போலீஸ் அதிகாரி உட்பட,
17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின், ஒரு பிரிவான, அல்சபாப் பயங்கரவாத குழு பொறுப்பேற்று உள்ளது.