சேரன் மகளுக்கு பிடிவாரண்ட்
இயக்குநர் சேரன் கடந்த ஆண்டு சிடூஎச் என்ற திரைப்பட விநியோகம் ஒன்றை தொடங்கினார். அதன் மூலம் திரைப்படங்கள் சீடிக்களாக வீட்டிற்கு சென்றடையும் வகையில் மாவட்டம் தோறும் விநியோகஸ்தர்களை நியமித்தார்.
ஆனால் அந்நிறுவனம் சரிவர செயல்படாத காரணத்தினால், தருமபுரி விநியோகஸ்தர் பிரசன்ன வாசுதேவன் தான் வைப்பு நிதியாக கொடுத்த 4.53 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார்.
இந்த பணத்தை அவருக்கு நேரடியாக கொடுக்காமல், காசோலையாக கொடுத்துள்ளனர். ஆனால் அது வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பபட்டது.
இதனால் அவர் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைமுறைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தருமபுரி நீதி மன்ற நீதிபதி சண்முகவேல் ராஜன், நிறுவனத்தின் நிர்வாகியான சேரன் மகள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, தற்போதும் ஆஜராகவில்லை இதனால் அவர் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறபிப்பதாக அறிவித்தார்.
இதனால் அவர் ஜாமீனில் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.