கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை நிருவகிக்க பொருத்தமான ஒருவர் என நான் அன்றும் கூறவில்லையெனவும், இன்றும் கூற மாட்டேன் எனவும் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான ஒருவரை நியமிக்காது போனால், வெற்றிபெறுவது சிரமமானதாக மாறும். வாயால் வற்றாளை கிழங்கு நாட்டுபவர்களுக்கு வேட்பாளர் பொறுப்பை வழங்கினால் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.
நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சி சிறந்த தீர்மானம் ஒன்றை எடுக்குமானால் கட்சிக்கு ஜனாதிபதித் தேர்தலை வெற்றி பெற முடியுமாக இருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் போட்டியிட்டு வெற்றிபெறுவது ஐ.தே.கட்சிக்கு முடியுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.