மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் சட்டமும், கொள்கையும் மாத்திரமே உள்ளதாகவும், இதனை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அத்துரலிய ரத்ன தேரரினால் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய அடித்தளம் போடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஒவ்வொருவரும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கருணா அம்மான் மேலும் கேட்டுக் கொண்டார்.