மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்சிஸ்ட் கட்யூனிஸ்ட் கட்சின் 22வது தமிழ் மாநில மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் நேரில் வந்த கே.பாலகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், விசிக துணைப்பொதுச்செயலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.