கத்தி குத்து சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Thunder Bay Limbrick குடியிருப்பு வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நேற்று அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடபட்டுள்ளதாவது,
சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணியளவில், தீயணைப்பு படையினரும் மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அச் சமயத்தில் 25 மற்றும் 27 வயதான இருவர் படுகயாங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதையடுத்து உயிராபத்தான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 25 வயதான இளைஞன் உயிரிழந்ததாகவும் மற்றைய நபர், தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.
ஆனால் இக் கத்திக்குத்து எவ்வாறு இடம்பெற்றது, தொடர்பான தகவல்களை திரட்ட தடுமாறிவரும் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/69292.html#sthash.VUepyMzw.dpuf