ஐ.பி.எல் இறுதி போட்டியின் முடிவுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
2017க்கான ஐ.பி.எல் இறுதி போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் புனே அணியை 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த போட்டியின் முடிவை வைத்து சூதாட்டம் ஆடியதாக 9 பேரை பொலிசார் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள், இறுதி போட்டியின் முடிவை கணித்தனரா அல்லது போட்டி முடிவை மாற்றும் வகையில் சூதாட்டத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
130 என்ற குறைந்த இலக்கை எட்ட முடியாமல் புனே தோற்றது குறித்து சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், சூதாட்டகாரர்களின் கைது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடைசி ஓவர் வரை சென்று 1 ஓட்டத்தில் தோல்வி நிர்ணயிக்கப்பட்டதில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு கடந்த மற்றும் நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது