இலங்கையில் பல பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அடைமழை பெய்யும் எனவும், தெற்கு, சப்ரகமுவ மற்றும் களுத்துறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இன்றைய தினமும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல் கொந்தளிக்கும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் மற்றும் மீனவ மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.