இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு
அமெரிக்காவில் இனி எதாவது விபரீதம் நடந்தால் நீதிமன்ற அமைப்பை சாடுங்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியான டிரம்ப் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உலகமக்கள் பலர் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் டிரம்ப்பின் இந்த அதிரடி உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிரம்ப்பின் உத்தரவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். இது டிரம்ப்பிற்கு பெரிதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவர் நீதிபதியின் இந்த தீர்ப்பினால், மிக ஆபத்தானவர்கள் நாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இது மிக மோசமான முடிவு என்று கூறியிருந்தார்.
Just cannot believe a judge would put our country in such peril. If something happens blame him and court system. People pouring in. Bad!
இந்நிலையில் ஒரு நீதிபதி நமது நாட்டை அபாயத்தில் தள்ளுவார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏதாவது விபரீதம் நடந்தால், அவரையும் நீதிமன்ற அமைப்பையும் சாடுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
I have instructed Homeland Security to check people coming into our country VERY CAREFULLY. The courts are making the job very difficult!