அமெரிக்காவில் பாலியல் ரீதியாகத் பெண்ணைக் தாக்கி கொலை செய்த இரண்டு பேருக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அமெரிக்காவின் அர்க்கன்சாஸ் மாநிலத்தில் ஒரே இரவில் இரண்டு பேருக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
52 வயது நிரம்பிய ஜேக் ஜோன்ஸ் என்பவரும், 46 வயது நிரம்பிய மார்செல் வில்லியம்சும் ஊசி மூலம் விஷம் செலுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதில் வில்லியம்ஸ் என்பவர் 1997ம் ஆண்டு 22 வயதுடைய ஸ்டாசி எரிக்சன் என்ற பெண்ணைக் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திக் கொலை செய்துள்ளார்.
இதே போல் ஜோன்ஸ் என்ற குற்றவாளி 1995ம் ஆண்டு 34 வயது மேரி பிலிப்ஸை கடத்திப் பாலியல் தாக்குதல் நடத்திக்கொலை செய்துள்ளார்.
லிட்டில் ராக்கில் அருகே உள்ள சிறைச்சாலை ஒன்றில் மூன்று மணிநேர இடைவெளியில் இரண்டு பேரும் மரணமடைந்ததை சிறை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.