சீனாவை தாக்கிய சூறாவளி: 11 பேர் பலி
உலகின் மிகப்பெரிய சூறாவளி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி இன்று மதியம் தாக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
தைவான் மற்றும் சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் ஷியாமென் நகரையும் தாக்கியது. புயலுக்கு பியூஜியான் மாகாணத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை 3 பேர் ஜெஜியாங் மாகாணத்தில் பலியாகியுள்ளனர். தைவானில், ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் 11 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொருபுறமிருக்க, நாளை சனிக்கிழமை கடுமையான மழை பெய்யும் என வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இச் சூறாவளி காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சூறாவளி, வலிமையான பாலம் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
குறித்த சூறாவளிக்கு உலகின் மிக வலிமையான சூறாவளி என்றும் மெரண்டி சூறாவளி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.